இருளில் ஒரு கனவு

காரிருட்டில் ஒளிக்கும்
நிலவு வேண்டும்
அதன் கீழே தனியாய்
நானிருக்க வேண்டும்
அங்கே மனதை வருடும்
நிசப்தம் வேண்டும்
என்னுள் எதையும் சிந்திக்காத
சிந்தை வேண்டும்
மணல்தரியில் படுத்து
உறங்கிட வேண்டும்
பிடித்தவை எல்லாம்
கனவாக வேண்டும்
அக்கனவில் ஒரு வாழ்க்கை
நடத்திட வேண்டும்
நல்லவை எல்லாம்
நடந்திட வேண்டும்
அங்கு எப்பொழுதும் பாடும்
மனிதன் வேண்டும்
தீவையை எண்ணாத
மனங்கள் வேண்டும்
மதங்கள் இல்லாத
மக்கள் வேண்டும்
துன்பத்திலும் மனிதன்
சிரித்திட வேண்டும்
சிரிப்பே தேசிய கீதம்
ஆகிட வேண்டும்
சிறு குழியிலும் தண்ணீர்
தோன்றிட வேண்டும்
பின்னர் என் கனவுகள் கலையாமல்
நிரந்திரம் ஆகிட வேண்டும்.