Tuesday, July 14, 2009

தலைப்பில்லை, எனக்கு தலைபாயுமில்லை

சமுதாய கிருமிகளும்
மத வெறி நாய்களும்
பொய் பிசாசுகளும்
பித்தலாட்ட குள்ள நரிகளும்
உயிர் உறிஞ்சும் ஒநாய்களும்
பிணம் தீனி கழுகுகளும்
வாழும் அரசியல் சாக்கடையை
பயம் என்னும் கருவி கொண்டு
தூர் வார கிளம்புங்கள்
இவர்களையும் மக்களை சேவிககும்
நன்றயுள்ள நாயகளாக்குவோம்

Wednesday, May 6, 2009

சற்று சிந்தித்து பார் - தீவிரவாதிக்கு சமர்ப்பணம்

பொய் வாக்கு உறிதிகளும்
வஞ்சனை வாக்கியங்களும்
வெற்று போராட்டங்களும்
திடீர் உண்ணாவிரதங்களும்
கண் துடைப்பு விலை குறைப்புகளும்
இலவச வேட்டிசட்டைகளும்
வோட்டுக்கு இரு நூறு ரூபாயும்
போட்டிக்கு மத கலவரத்தையும்
தான் பாட்டுக்கு இன கலவரத்தையும்
தூண்டி விடுவது சராசரி மனிதனா?

தீவிரவாதத்தால் பகை போக்கி
மறைந்தவர்களுக்கு பகரம் கோரி
ஓர் இஸ்லாமியனுக்கு
மற்றொரு இந்து
ஓர் உயிருக்கு
மற்றொரு உயிர் என்று
போர் குரல் எழுப்பி செல்லும்
கோழை தீவிரவதியே!

உனது கோழைத்தனமான வீரம்
சோற்றிற்கு மண்டியடிக்கும்
நடுத்தர வர்கத்திடம் தான் செல்லும்.

சமுதாயத்தை திருத்திவது தான்
உன் நோக்கமென்றால்-உனக்கென்று
ஓர் கொள்கை இருந்தால் - தவறு
செய்பவரை தட்டிக்கேள் - அல்லாது
என் போன்ற நடுத்தர வர்கத்திடம்
காட்டாதே உனது கோழை வீரத்தை.

நீ செய்யும் தவறினால்
மற்றுமொரு அமைப்பு உருவாகும்,
அவர்கள் உன்னை சார்ந்தவரை
களை எடுக்க- நீ அவர்களை களை எடுக்க
இறுதியில் அரசியல் சதுரங்கத்தில்
வெறும் காய்களாக போவாய்.
சற்று சிந்தித்து பார்.

Tuesday, December 16, 2008


என் வாழ்க்கை புத்தகத்தில்
உன் பெயர் எழுதிய தாள்களை
கிழித்து ஏறிய முயல்கிறேன்
இதர்காவது உதவி செய்.

Monday, December 1, 2008

குட்டி கதை


ஹே இங்க படியிலே உட்கார்ந்து
என்னடா பண்றே

ஓ, நீயா, ஹி ஒண்ணுமில்ல
ஒரு சின்ன கவிதை

ஓஹோ, நீ கவிதை எல்லாம் கூட எழுதுவியா?

ம்ம், இப்போ தான் இரண்டு நாளா
எங்க, காட்டு பார்க்கலாம்

அவள் கேட்க அவனும் கொடுத்தான்

கை மாறியது தாள்கள்
இடம் மாறியது இதயங்கள்.

Friday, November 28, 2008

வெற்றிடம்


உனக்கென்று மாற்றி வைத்த பொழுதுகளில்
நீயில்லை.

Friday, October 10, 2008

போர்


என்னக்குள்ளே போர்
வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை
ஆனால், இறுதியில்
மடிந்து மண்ணாவது நான்.

Tuesday, July 29, 2008

வட்டம்


இரவு போனதும்
நிலவும் போனது
பிரிவு போனதும்
நினைவும் போனது

நிலவு போனதும்
வானம் இருண்டது
நினைவு போனதும்
வாழ்க்கை இருண்டது

வானம் இருண்டதும்
இருள் சூழ்ந்தது
வாழ்க்கை இருந்ததும்
உன் புன்னகை சூழ்ந்தது

இருள் சூழ்ந்ததும்
உலகம் ஓய்ந்தது
புன்னகை சூழ்ந்ததும்
மனம் ஓய்ந்தது

உலகம் ஓய்ந்ததும்
இரவு போனது
மனம் ஓய்ந்ததும்
பிரிவும் போனது