Friday, May 23, 2008

२००० march, after college days

கடலில் அலை மோதவில்லை
காலையில் ஓர் காகம் கூட கரையவில்லை
காற்றடித்தும் - ஓர் இலையும் அசையவில்லை.
மௌனம்,
மனித மனத்தை பித்தாக்கும் மௌனம்.
ஏன் இந்த நிலை என்று சிந்தித்த பொழுது
புரிந்தது,
இன்று முதல் கல்லூரி இல்லை என்று....
சற்று பின்னோக்கி சென்றேன்
கல்லூரி சாலைகள் மலரால் பொதிந்தவை போலிருந்தது
சிரித்த முகங்கள் மனதில்
மின்னி மின்னி சென்றன,
ஆனந்தமாய் கழித்த பல
நிமிடங்கள் கார்மேகம் போல்
மனத்தை அலைக்கழித்தது,
துன்பமாய் தோன்றிய நாளெல்லாம்
இன்று ஆனந்தமாய் இருக்கிறது.,
கூத்தாடி கழித்த நிமிடங்களை
வாழ்நாளின் இறுதி வரை சுமந்து கொண்டு இருப்பேன்.,
என் ஆழ் மனத்தின் மூலயில்,
அவை என்றும் பசுமையாய் வாழ்ந்திருக்கும்.....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home